மழலையர் பள்ளிகள் திறப்பு! –  அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழலில் கடந்த 1ம் தேதி முதலாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகளை திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.

தற்போது 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், மழலையர் பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.