‘ரங்கோலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”.  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.  இந்தப் படத்தை வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்குகிறார். இவர் இயக்குனர் வஸந்த்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இதில் ஆடுகளம் முருகதாஸ், ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருகின்றனர். இதில் ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைப்பாளராகவும், மருதநாயகம் ஒளிப்பதிவாளராகவும், ரா.சத்திய நாராயணன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.