சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு எதிர்ப்பு! லிப்ரா ரவீந்திரனுக்கு அமோக ஆதரவு!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கஜானாவை கைபற்றும் லிப்ரா ரவீந்திரன்!?

தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே கலை கட்டிவிடும். அது பொது தேர்தலாக இருந்தாலும் சரி, சங்கங்களின் தேர்தலாக இருந்தாலும் சரி. அதிலும் சினிமா சம்பந்தப்பட்ட தேர்தல் என்றால், வாக்களிக்கும் வாக்களர்களுக்கு கூடுதல் கொண்டாட்டம் தான். வாக்குகளை சேகரிப்பதற்காக வாக்காளர்களை கவரும் விதத்தில் அவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளும், அன்பளிப்பும் வழங்கப்படும். அதோடு காரசாரமான குற்றச்சாட்டுக்களும் எடுத்துவைக்கப்படும்.  என்பது வாடிக்கை! இப்போது விஷயத்துக்கு வருவோம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. ஏற்கனவே சங்க பொறுப்புகளில் இருந்தவர்களே மீண்டும் நிர்வாக பொறுப்புகளுக்கு போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் முதன்முறையாக லிப்ரா ரவீந்திரன் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தலில் T.ராஜேந்தர் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிங்காரவடிவேலன் தற்போது சுயேட்சையாக பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். முரளி ராமசாமி அணி சார்பாக தற்போதைய பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், மன்னன் அணி சார்பாக லிப்ரா ரவீந்திரன், ஓயாத அலைகள் அணி சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நண்பரும் ‘றெக்கை’ பட தயாரிப்பாளருமான கணேஷ், ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நால்வரில் குறிப்பிடத்தக்க அளவில், தயாரிப்பாளர்களின் விருப்பத்துக்குரியவராக லிப்ரா ரவீந்திரன் மாறி வருகிறார்.

எல்லோரும் அரசாங்க உதவி, நட்சத்திர கலைவிழா, சிறு முதலீட்டு படங்களுக்கு அரசு மானியம், அரசு மூலம் வீட்டு வசதி சலுகைகள் என தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு கேட்டு வந்தனர். கோடிக்கணக்கில் முதலீடு செய்து படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அரசிடமும், நடிகர்களிடமும் உதவிக்காக ஏன் கையேந்த வேண்டும். கொடுக்கிற நிலையில் இருப்பவர்கள் பிறர் உதவிக்காக கையேந்த கூடாது.

நாம் தயாரிக்கும் திரைப்படங்களை சங்கத்தின் சார்பில் படங்களுக்கு இருக்ககூடிய அத்துணை வியாபார வாய்ப்புகளையும் பயன்படுத்தி செய்து கொடுத்தால் எந்த படமும் நஷ்டமடையாது. அது மட்டுமின்றி இந்த வேலைகளை முறைப்படி செய்து கொடுப்பதற்காக நடைமுறையில் வழங்கப்படும் சேவை கட்டணமே கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கிடைக்கும். என, சினிமா விழா மேடைகளில் பேசிவந்த லிப்ரா ரவீந்திரன், தான் தயாரிக்கும் திரைப்படங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதியாக தருவேன். என, மன்னன் தலைமையிலான வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அறிவித்தார்.

இதுவரை நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்களில் போட்டியிட்ட எந்த தயாரிப்பாளரும் இப்படி கூறியதில்லை. தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சந்திரபிரகாஷ் ஜெயின் அவர் கொடுத்த கடனை வசூலிக்க பொருளாளர் பதவியை பயன்படுத்தினார், என்கிற குற்றசாட்டு தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுப்பபடுகிறது. அவரது போட்டி வேட்பாளர்களும் தங்கள் பிரசாரத்தில் இதனை முன்னிலைபடுத்துகின்றனர்.

லிப்ரா ரவீந்திரன் குறுகிய காலத்தில் தயாரிப்பாளர்கள் மத்தியில் பிரபலமானவர். கொரோனா காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்துள்ளார். அது மட்டுமின்றி தன்னிடம் உதவி கேட்டுவரும் தயாரிப்பாளர்களுக்கு கல்வி, மருத்துவ உதவிகளை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி செய்து வந்தவர். நாளை நடைபெற உள்ள தேர்தலில் தனக்கு வாக்கு கேட்பவர்களிடம், அவர்செய்த எந்த உதவியையும் கூறாமல் உங்களுக்காக உழைக்க எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள், வாக்களியுங்கள். என கேட்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் அவருக்கான ஆதரவை அதிகரித்து வருகிறது. சந்திரபிரகாஷ் ஜெயின் மீதான எதிர்ப்பு, மன்னனுக்கான ஆதரவு அலை இவரை வெற்றி பெற வைக்கும் என்பதே தேர்தல்களநிலவரமாக உள்ளது.