டிட்டோ, மகேஷ் மற்றும் தீபிக்ஷா ஆகியோர்களுக்கிடையே நடக்கும் முக்கோண காதல் கதையே செல்ல குட்டி. 1990 களில் நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கதையின் நாயகர்கள் டிட்டோ, மகேஷ் மற்றும் நாயகி தீபிக்ஷா ஆகியோர் ஒரே பள்ளியில் 12ம் வகுப்பில் படித்து வருகிறார்கள். தீபிக்ஷா குடும்பத்தினரும், டிட்டோ குடும்பத்தினரும் நெருங்கிய பழக்கமுள்ளவர்கள். அனைவரிடமும் சகஜமாக பழகும் தீபிக்ஷா மகேஷிடமும் அதேபோல் பழகி வருகிறார். இதை காதல் என புரிந்து கொள்ளும் மகேஷ், தீபிக்ஷாவிடம் தனது காதலை தெரிவிக்கிறார். ஆனால் தீபிக்ஷா அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தீபிக்ஷா டிட்டோவின் மேல் ஒருதலையாக காதல் கொள்கிறார். காதல் தோல்வியால், எப்போதுமே வகுப்பில் முதல் மாணவனாக வரும் மகேஷ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைகிறார்.
மகேஷைத்தவிர அனைவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றனர். டிட்டோவும் தீபிக்ஷாவும் சேர்ந்தே கல்லூரிக்கு வருவதும் போவதுமாக இருக்கின்றனர். இது மகேஷூக்கு ஆத்திரமூட்டுகிறது.
தீபிக்ஷாவுக்கும் டிட்டோவுக்கும் திருமணம் செய்து வைக்க அவ்அர்களது பெற்றோர்கள் முடிவு செய்கின்றனர். அதை டிட்டோ மறுக்கிறார். அதன் பிறகு என்ன நடந்த்து. என்பது தான் செல்ல குட்டி படத்தின் கதை.
டிட்டோ மற்றும் மகேஷ் இருவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்துள்ளனர். பல்வேறு காலக்கட்டத்திற்கு ஏற்றபடி தோற்றத்தை மாற்றியமைத்து குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளனர்.
நாயகியாக நடித்திருக்கும் தீபிக்ஷா அழகாக இருப்பதோடு, குறிப்பிடும்படியும் நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சிம்ரனும் நன்றாகவே நடித்திருக்கிறார்.
கல்லூரியின் முதல்வராக நடித்திருக்கும் மதுமிதா, ஆசிரியராக நடித்திருக்கும் சாம்ஸ், திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லட்சுமி ஆகியோர் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
டி.எஸ்.முரளிதரனின் இசையில் பாடல்கள், சிற்பியின் பின்னணி இசை ஓகே.
ஒளிப்பதிவாளர்கள் பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஆகியோரதளொளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
குறைகளுடன் கூடிய வழக்கமான முக்கோண காதல் கதையாக இருந்தாலும், சில திருப்பங்களும், காட்சிகளும் ரசிக்கும்படி காட்சிகளை அமைத்திருக்கிறார், இயக்குநர் சகாயநாதன்.