தேவயானி திறந்து வைத்த, திருப்பதி பீமாஸ் சைவ உணவகம்!

திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோவிலுக்குப் பிறகு திருப்பதி என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது ‘திருப்பதி பீமாஸ்’ தான். உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள் என 1954 ஆம் ஆண்டு முதல், சுமார் 70 ஆண்டுகளை கடந்து இத்தொழிலில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் திருப்பதி பீமாஸ் தற்போது தமிழகத்தில் தனது முதல் கிளையை சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர்ஸ் பிளாசா மாலில் திறந்துள்ளது.

திருப்பதி பீமாஸ் சைவ உணவகத்தின் திறப்பு விழாவில், பிரபல திரைப்பட நடிகை தேவயானி மற்றும் இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள்.  இவர்களுடன் தொழில் முனைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய திருப்பதி பீமாஸ் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் அசோக்,

“70 ஆண்டுகளாக உணவகம் மற்றும் விடுதி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது 4 வது தலைமுறையில் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம். ஒவ்வொரு தலைமுறையின் போதும், நவீன காலத்துக்கு ஏற்ப எங்களை புதுப்பித்துக் கொண்டதால் தான் இந்த தொழிலில் நாங்கள் வளர்ச்சியடைந்து வருகிறோம். முதன் முதலில் லாட்ஜ்களை திறந்ததும், ஓட்டல்களில் அட்டாச் பாத் அமைத்ததும் நாங்கள் தான். பிறகு,  2 ஸ்டார், 3 ஸ்டார் விடுதிகளை அமைத்ததும் நாங்கள் தான். இப்படி திருப்பதியில் தொடங்கி, காக்கிநாடா, பெங்களூர் ஆகிய பகுதிகளில் எங்கள் கிளைகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழகத்தில் ‘திருப்பதி பீமாஸ்’ சைவ உணவகத்தின் முதல் கிளை சென்னை, அண்ணா சாலையில், ஸ்பென்சர்ஸ் பிளாசா மாலில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கிளையை தொடர்ந்து மேலும் 10 புதிய கிளைகளை சென்னையில் திறக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்தியா முழுவதும் திருப்பதி மீமாஸ் உணவகம் மற்றும் விடுதிகளை திறக்கவும் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

நடிகை தேவயானி பேசுகையில்,

“பீமாஸ் உணவகம் 70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. தற்போது 4வது தலைமுறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சாதனையாகும். இதுபோல் மேலும் பல தலைமுறைகளை கடந்து இவர்கள் பல சாதனைகள் படைக்க வேண்டும். இவர்களது உணவு அனைத்தும் சுவை மிக்கதாக இருக்கிறது. அதனால், சுவையான சைவ உணவு சாப்பிட வேண்டுமானால், ஸ்பென்சர்ஸ் பிளாசாவில் இருக்கும் திருப்பதி பீமாஸுக்கு வாங்க.

பொதுவாக சைவ உணவு என்பது நம்ம உடலுக்கு மிக ஆரோக்கியமானது. எளிதியில் ஜீரணம் ஆக கூடியதும் சைவ உணவு தான். அதிலும், திருப்பதி பீமாஸ் உணவகம் போன்ற தரமான உணவுகள் சுவையாக மட்டும் இன்றி உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது. பீமாஸின் பருப்பு பொடி, நெய் மற்றும் கோங்ரா சட்னி சிறப்பானது என்று சொல்கிறார்கள். எனக்கு சாம்பார், ரசம் மிகவும் பிடிக்கும். இன்று சென்னையில் முதல் கிளையை திறந்திருக்கும் திருப்பதி பீமாஸ், மேலும் 10 கிளைகள் திறக்க இருக்கிறார்கள். பத்துக்கு மேலும் திறக்க வேண்டும், என்று நான் வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

நடிகர் இயக்குநர் தம்பி ராமையா பேசுகையில்,

“திருப்பதி பீமாஸ் என்ற பெயரை நாம் நீண்ட நாட்களாகவே கேள்வி பட்டிருக்கிறோம், ஒரு நாளாவது இந்த விடுதியில் தங்க முடியுமா, என்றெல்லாம் யோசித்தது உண்டு. அப்படிப்பட்ட புகழ் பெற்ற திருப்பதி பீமாஸின் புதிய கிளை திறப்பு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி. திருப்பதியில் பிரபலமாக இருக்கும் திருப்பதி பீமாஸ், இப்போது என்னையில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. எனவே, இனி சென்னையிலும் திருப்பதி பீமாஸ் பிரபலமடைய வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.