‘ஹரி ஹர வீரமல்லு’  படத்தில் பாபி தியோல் கதாபாத்திரம் பவர்ஃபுல்லாக இருக்கும். – இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’திரைப்படத்தில், முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக  பாபி தியோல் நடிப்பது  பலருக்கும் தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

‘ஹரி ஹர வீரமல்லு’ படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி தியோல் அவர்களின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. பாபி தியோல் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்தில் அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, ஜோதி கிருஷ்ணா  அவரது கதாபாத்திரத்தை புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க முடிவு செய்தார்.

‘அனிமல்’ படத்தில் பாபி தியோல்  அதிக வசனமில்லாமல், முகபாவனைகளின் வழியாக ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய அவரது திறமை எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் தான், ஹரி ஹர வீரமல்லு படத்திலும் அவரது கதாபாத்திரத்தின் வடிவமைப்பினை முழுமையாக மாற்ற முடிவு செய்தேன்,”. இந்த புதிய வடிவமைப்பின் மூலம் ஔவரங்கசீப்பின் கதாபாத்திரத்தில் ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கதையின் பின்னணி, உந்துதல், உடல் மொழி என அனைத்தும் பாபி தியோலின் நடிப்பின் திறமைக்கு ஏற்ப மறு வடிவம் செய்யப்படுள்ளது.

‘’புதிய கதாபாத்திர வடிவத்தை நான் அவரிடம் சொன்னபோது, பாபி தியோல் மிகுந்த உற்சாகத்தைத் தெரிவித்தார். அவருக்கு, சவாலான வேடங்களில் நடிப்பதும், புதியதொரு வடிவில் ரசிகர்களிடம் தன்னை மாறுபடுத்தி காண்பிப்பதும் மிகவும் பிடிக்கும். பார்வையின் மூலம் அவர் சொல்லும் உணர்வுகள், திரை தோற்றம், ஆளுமை அனைத்தும் கதையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றன. அவருடன் பணியாற்றிய அனுபவம் மிக சிறப்பானது,”. என்கிறார், இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.