லலிதா ஷோபிக்கு ‘கேரள மாநில’ திரைப்பட விருது!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜின் மனைவி, லலிதா ஷோபி. இவரும் நடன இயக்குனராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

ஜெயசூர்யா, அதிதி ராவ் நடிப்பில் நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான `சுஃபியும் சுஜாதாயும்’ என்ற மலையாளப் படத்தில், லலிதா ஷோபி நடன இயக்குனராக பணியாற்றினார். சென்ற வருடம் வெளியான இப்படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பாராட்டை பெற்றதுடன், 51 வது கேரள மாநிலத்தின் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்காக லலிதா ஷோபிக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து நடன இயக்குனர் லலிதா ஷோபி கூறுகையில்,

“இந்த விருதை நம்மை விட்டு மறைந்த இயக்குனர் நரணிபுழா ஷாநவாஸ் அவர்களுக்கு சமர்பிக்கிறேன். அவருடன் பணியாற்றிய நாட்கள் மறக்கமுடியாதவை.

நான் பாடலுக்கு நடனம் அமைத்து கொடுக்கையில்,  இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கண்டிப்பாக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு  கூறியிருந்தனர்.  அது இன்று நிறைவேறியுள்ளது.

மேலும் `சுஃபியும் சுஜாதாயும்’ படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கேரள மாநில திரைப்பட விருது குழுவினருக்கும் மற்றும் கேரள மாநில அரசுக்கும் இத்தருணத்தில் எனது  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்