வருடம் தோறும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்று வரும் மார்கழியில் மக்களிசை இந்த வருடம் 24.12.23 அன்று ஓசூரில் 24 டிசம்பர், மாலை லாவண்யா மஹால் பின்புறம், மத்திகிரி கூட்டு ரோடு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில், முனுசாமி பெரிய மேளத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் எழுத்தாளர் த. மு. எ. ச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவும் இயக்குனர் பா. இரஞ்சித் சிறப்புறை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, சித்தன் ஜெய மூர்த்தி குழுவின் நாட்டுப்புற இசை, ராப், இசை, கானா மற்றும் அறிவு & அம்பாசாவின் ஆகியோரின் அரங்கம் அதிரும் இசையோடு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிறைவாக நன்றி உரையில் இயக்குனர் பா. இரஞ்சித் பேசுகையில்,
இந்த இரண்டு நாள் நிகழ்வில் மக்கள் அளித்த ஆதரவு என்னை நெகிழ வைக்கிறது .இது வெறும் கலை நிகழ்ச்சி மட்டுமல்ல. இது, வரலாற்றில் மனித மாண்பை மீட்டெடுக்கும் ஒரு மாபெரும் முயற்சி! என்றார்.
நடிகர் கலையரசன், இயக்குனர் லெனின்பாரதி, மற்றும் இயக்குனர் ஜெய்குமார், தினகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.