கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்!

கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது.  இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி பொதுமக்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை, நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவகுமார், நடிகர் சூர்யா, திருமதி ஜோதிகா சூர்யா, அவர்களின் வாரிசுகளான தேவ் மற்றும் தியா ஆகியோர்களும் பார்வையிட்டனர்.

இவர்களுடன் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. வெங்கடேசனும் உடன் சென்று இருந்தார்.

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின்னர், சிவகுமார் குடும்பத்தினர் தங்களது கருத்துக்களை அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டனர்.