வேலம்மாள் நெக்ஸஸ் மாணவர்களின் கையெழுத்துப் பிரதிகள் வெளியீடு!

வேலம்மாள் வித்யாலயா, ஆவடி மற்றும் பருத்திபட்டு பள்ளிகளைச் சேர்ந்த 142 மாணவர்கள், கைகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில்,  புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. சேதன் பகத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களின் புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்தினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து ஆசீர்வதித்த உணர்ச்சி பூர்வமான தருணம் நிகழ்வின் சிறப்பை மேலும் உயர்த்தியது.

விழா, வேலம்மாள் நெக்ஸஸ் மாணவர்கள் அளித்த மிகுந்த வரவேற்புடன் தொடங்கியது. அவர்களின் ஒழுங்கு, ஒற்றுமை மற்றும் கலாசார நிகழ்வுகள் அனைவரையும் கவர்ந்தன. உரையாடல் அமர்வில், மாணவர்கள் பல ஆர்வமுள்ள கேள்விகளை முன்வைத்தனர். அவற்றிற்கு சேதன் பகத் அவர்கள் மகிழ்ச்சியுடன் பதிலளித்து, சிறிது தமிழிலும் உரையாடி அனைவரையும் ஈர்த்தார்.அவர் வழங்கிய முன்னேற்றப் பேச்சில், ஒவ்வொரு மாணவரிலும் தனித்துவமான படைப்பாற்றல் உள்ளது என்பதை வலியுறுத்தி, தொடர்ந்து எழுதவும் கனவு காணவும் ஊக்கமளித்தார்.

வேலம்மாள் நெக்ஸஸ் தாளாளர், MVM வேல்மோகன் , 142 மாணவர்களின் புத்தகங்களில் வெளிப்பட்ட படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் தனித்துவமான சிந்தனைகளை பாராட்டினார். குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் ஊக்கம் மற்றும் ஆதரவு மிக முக்கியமான பங்காற்றுகிறது. என்று குறிப்பிட்டு, அனைத்து மாணவர்களையும் நூல்கள் படிக்க, எழுத, மற்றும் உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்க ஊக்குவித்தார். இவர்கள் எழுதும் புத்தகங்கள், சேதன் பகத் போன்ற பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளைப் போல தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உயர வேண்டும். வாழ்த்தினார்.