‘ப்ளடி பெக்கர்’ ஒரு இரவில் நடக்கும் க்ரைம் த்ரில்லர்!  – இயக்குநர் சிவபாலன் முத்துகுமார்!

‘ஃபிளமென்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில், இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், ‘ப்ளடி பெக்கர்’. இப்படத்தினை நெல்சன் திலிப்குமாரின் உதவியாளர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியிருக்கிறார். பிச்சைக்காரர் தோற்றத்தில் நடிகர் கவின் நடித்திருக்க, முக்கியமான கதாபாத்திரத்தில் அக்ஷயா ஹரிஹரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

‘ப்ளடி பெக்கர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ஏகோபித்த வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், படம் குறித்து இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் கூறியதாவது..

நெல்சன் திலிப்குமாருடன் அவர் விஜய் டிவியில் இருக்கும் போதிலிருந்தே நட்புடன் இருந்து வருகிறேன். கோலமாவு கோகிலா, டாக்டர் இந்த இரண்டு படங்களில்  பணிபுரிந்திருக்கிறேன். அந்த நட்பே இந்தப்படம் உருவாவதற்கு காரணமாக இருந்தது.

எந்தவிதமான பொறுப்புமில்லாமல் சுற்றித்திரியும் ஒருவனை பற்றிய, ஒரு நைட்ல நடக்குற அட்வெஞ்சர், அதாவது,  அவன் ஆசைப்பட்டு செய்ற ஒரு செயல் அவனுக்கு சிக்கலை கொடுக்குது. இது தான் ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் கதை. இது ஒரு க்ரைம் ட்ராமா. கவின் பிச்சைக்காரராக மாறியதற்கு ஒரு சுவாரசியமான காரணமிருக்கும். சில டார்க் காமெடிகளும் இருக்கும்.

‘ப்ளடி பெக்கர்’ டைட்டில் நெல்சன் திலிப்குமாரோட ஐடியா தான். வேறு சில டைட்டிலும் யோசிச்சோம். இந்த டைட்டில் கதையோட ஒத்துப்போனதால் இதுவே ஃபைனாலாயிடுச்சு. கவினோட லுக் ரொம்ப நல்ல ஒர்க் அவுட் ஆகிருக்கு. முதன் முதலா பெக்கர் கெட்டப் போட்டுகிட்டு வெளியே போன போது அவருக்கு பிச்சை போட்ருக்காங்க. எனக்கும் கவினுக்கும் நல்ல புரிதல் இருந்ததால் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கவினுக்கு ஜோடி இல்ல. ஆனால், அக்ஷயா ஹரிஹரன் காதல் இருக்கும். இந்தப்படம் ஒரு நல்ல எண்டெர்டெயின்மென்ட் படமா இருக்கும். என்றார்.