தேடப்பட்டு வந்த பெண் தாதா எழிலரசி பாஜகவில் இணைந்தார்!

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தாதா எழிலரசி (40). இவர் மீது கொலை (புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகர் கொலையாளி), கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், வெடிகுண்டு பயன்படுத்தி மிரட்டுதல்,  அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த மாதம் 31ஆம் தேதி, மிரட்டி பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக, காரைக்கால் திருமலைராயன் பட்டினம் காவல் நிலையத்தில், புகார் கொடுக்கப்பட்டது. இதனால், காவல்துறையினர் எழிலரசியை தேடிவந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி பாஜக மாநில தலைவரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதனின் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் பாஜக -வில் இணைந்து வருகின்றனர். என்பது குறிப்பிடதக்கது.