செல்வராகவன் என்னை நம்பினார் –  இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

ராக்கி  படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், திரைப்பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.  அவரது அடுத்த   படைப்பான “சாணி காயிதம்”திரைப்படம் பிரைம் வீடியோவில் வரும் மே 6 ஆம் தேதி  வெளியாகிறது. இதில்  நடிகை கீர்த்தி சுரேஷ் , இயக்குனர்  செல்வராகவன் இணைந்து நடித்துள்ளனர்.  இந்தப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இட்டுச் செல்லும், என சொல்லும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்  மேலும் கூறும்போது..,

“நான் மகாநதி திரைப்படத்தில் அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன். அதனால் சாணி காயிதம்  எடுக்கும் போது இப்படத்திற்கு அவர்  பொருத்தமாக இருப்பாரென  அவரை என் மனதில் குறித்து வைத்திருந்தேன். இப்படத்தில் அவர் நடிக்கும் பாத்திரம் அவர் இதுவரை செய்திராத  ஒரு புதுமையான பாத்திரம்.  அவர் கண்டிப்பாக இதற்கு  சரியாகப் பொருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவரை புதுமையான  தோற்றத்தில் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால் அவர் எனது முதல் தேர்வாக இருந்தார். இக்கதாபாத்திரத்தை அவர் ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.”

“செல்வா சார் திரைப்படத் துறையில் பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட இயக்குனர், அவர் இக்கதாபாத்திரத்தை ஏற்பது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.”

“சித்தார்த் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) செல்வா சாரின் நெருங்கிய நண்பர் என்பதால் செல்வா சாரை அணுகுவது எளிதாக இருந்தது. அவரைச் சந்தித்து கதையைச் சொன்னேன், அவருக்கு கதை பிடிக்கவே விரும்பி ஏற்றார்”

அவர் அட்வைஸ் தருவாரா ?  அல்லது எங்கள் பார்வைகள் வேறுபாட்டின் காரணமாக படைப்பு வேறுபாடுகள் இருக்குமா ? என்றெல்லாம் யோசித்தேன். ஆனால் தன்னை  வெறும் நடிகராகவும், என்னை இயக்குனராகவும் நினைத்து கொண்டு என்மீது முழுமையான நம்பிக்கை வைத்து எனது தேவையற்ற சந்தேகங்களை அவர் பொய்யாக்கினார்.” என்றார்.

ஸ்கிரீன் சீன் மீடியாவின் பேனரின் சார்பில்  தயாரிக்கப்பட்டுள்ள  சாணி காயிதம் திரைப்படம் மே-6 அன்று பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் (சின்னி என்ற பெயரில்) வெளியாகவுள்ளது