கமல்ஹாசன், மம்முட்டி,மோகன்லால் – ‘மனோரதங்கள்’ மலையாளத் தொடர்!

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் 90 ஆண்டு கால பாரம்பரியத்தை போற்றி கொண்டாடும்வகையில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில் தயாரான ‘மனோரதங்கள்‘ எனும் மலையாள ஆந்தாலஜி தொடரை ஜீ-5 ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்தொடரில் மலையாள திரையுலகின் ஒன்பது சூப்பர் ஸ்டார்கள் மற்றும் எட்டு புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களுடன் முன் எப்போதும் இல்லாத ஒத்துழைப்புடன் உருவாகியுள்ளது இந்த ஆந்தாலஜி தொடர்.

‘மடத் தெக்கேபாட்டு வாசுதேவன் நாயர்’ என்ற அசலான பெயரைக் கொண்டிருந்தாலும், ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ என புகழ் பெற்ற மலையாள இலக்கிய மாமேதையின் 90 ஆண்டு கால பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் இந்த படைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘மனோரதங்கள்‘ என்பது கடவுளின் சொந்த தேசமான கேரளாவின் பசுமையான பின்னணியில் மனித இயல்பின் சிக்கலான இருமையை ஆராயும் ஒரு சினிமா பயணமாகும். இதில் இடம்பெறும் அனைத்து கதைகளும் எம்.டி.வாசுதேவன் நாயரால்  எழுதப்பட்டது.

இந்தத் தொடர் மலையாள சினிமாவில் நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளின் திறமைகளை உச்ச நிலையில் ஒன்றிணைத்துள்ளது.‌ ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட ஒன்பது கதைகள் மூலம் இந்த தொடர் மனித நடத்தையின் முரண்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.‌

இரக்கம் மற்றும் மனிதனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய அடிப்படை உணர்வு தூண்டுதல்கள் ஆகிய இரண்டின் அவசியத்தை வலியுறுத்துகிறது. உன்னதம் – முதன்மை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய்வதன் மூலம் உலகளாவிய அனுபவங்கள், உணர்வுகளை துல்லியமாக பேசும் மனித நேயத்தின் செழுமையான மற்றும் நுட்பமான சித்தரிப்பை இந்த தொடர் வழங்குகிறது.

முதன்முறையாக பல நட்சத்திர நடிகர்களும், திறமையான இயக்குநர்களும் ஜீ-5-ன் இந்த ஆந்தாலஜி தொடரில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். பத்மவிபூஷன் டாக்டர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய ஒன்பது அழுத்தமான கதைகளை இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது.

இதில் ‘ஒல்லவும் தீரவும்’ (சிற்றலைகள் மற்றும் நதிக்கரை) என்ற கதையில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார். இதுவே இந்த தொடரின் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

கடுக்கண்ணவ : ஒரு யாத்திரை குறிப்பு (கடுக்கண்ணவ:  ஒரு பயணக் குறிப்பு) – இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் மம்மூட்டி, அனுமோல் நடித்திருக்கிறார்கள்.

ஷிலாலிகிதம் (கல்வெட்டுகள்) – இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிஜுமேனன் -சாந்தி கிருஷ்ணா – ஜாய் மேத்யூ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

காட்சி (பார்வை) -இயக்குநர் ஷியாம பிரசாத் இயக்கத்தில் பார்வதி திருவோத்து, ஹரிஷ் உத்தமன் நடித்திருக்கிறார்கள்.

வில்பனா (தி சேல்) – இயக்குநர் அஸ்வதி நாயர் இயக்கத்தில் மது, ஆசிப் அலி நடித்திருக்கிறார்கள்.

ஷெர்லாக் : இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பகத் பாசில் மற்றும் ஜரீனா மொய்து நடித்திருக்கிறார்கள்.

ஸ்வர்க்கம் துறக்குன்ற நேரம் (சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் தருணம்) – இயக்குநர் ஜெயராஜன் நாயர் இயக்கத்தில் கைலாஷ், இந்திரன்ஸ், நெடுமுடி வேணு, என்.ஜி.பணிக்கர், சுரபி லட்சுமி நடித்துள்ளனர்.

அபயம் தீடி வேண்டும் (மீண்டும் ஒருமுறை புகலிடம் தேடி) – இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சித்திக், இஷித் யாமினி, நசீர் நடித்துள்ளனர்.

காதல்க்காட்டு (கடல் காற்று)  – ரதீஷ் அம்பாட் இயக்கத்தில் இந்திரஜித், அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்கள்.‌

பத்ம விபூஷன் டாக்டர் கமல்ஹாசன் இத்தொடர் குறித்துப் பேசுகையில்,

”எம்.டி.வாசுதேவன் நாயரின் வாழ்நாள் அபிமானி என்ற முறையில் ‘மனோரதங்கல்’ தொடரை வழங்குவதில் பெருமை அடைகிறேன். இந்த தொகுப்பானது சாதாரண கதைகளின் தொகுப்பாக இல்லை. இந்த தொடர் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஆழமாக சென்று தாக்கும் என நான் நம்புகிறேன். ஏனெனில் இது உலகளாவிய அனுபவங்களையும், உணர்வு குவியலையும் குறிக்கிறது” என்றார்.

நடிகர் மோகன்லால் பேசும்போது,

”இந்த ‘மனோரதங்கல்’ எம்.டி.யின் கொண்டாட்டம் – வாசுதேவன் நாயரின் நம்ப முடியாத மரபு. கதை சொல்லிகள் மற்றும் கலைஞர்களின் தலைமுறைகளை வடிவமைத்து ஊக்கப்படுத்திய ஒரு மரபு.  பிரியதர்ஷனின் இயக்கத்தில் ‘ஒல்லவும் தீரவும்’ படைப்பில் பணியாற்றியது உண்மையிலேயே மறக்க இயலாத அனுபவம்.

மனித உணர்வுகள் மற்றும் உறவுகளின் சாரத்தை.. கேரளாவின் அழகான மற்றும் கலாச்சார ரீதியாக வளமான பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள கதை. இந்தத் தொகுப்பு எங்கள் துறையில்  தலை சிறந்த ஆளுமைகளை ஒன்றிணைக்கிறது. மேலும் இந்த அழுத்தமான மற்றும் ஆழமாக பயணிக்கும் கதைகளை பார்வையாளர்கள் காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

எம்.டி.வாசுதேவன் நாயர் எனும் மேதைக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் தயாரான இந்த படைப்பில் ஒரு அங்கமாக இருப்பது பெருமையாக உள்ளது.” என்றார்.

நடிகர் மம்முட்டி பேசும்போது,

”இந்த ‘மனோரதங்கல்’ படத்தின் ஒரு பகுதியாக இருப்பது திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த பாக்கியமும்கூட. இந்தத் தொகுப்பு எம்.டி.வாசுதேவ நாயர் எனும் மேதைக்கான காணிக்கை.

திறமையான இயக்குநரான ரஞ்சித் இயக்கத்தில் ‘கடுக்கண்ணவ: ஒரு யாத்திரை குறிப்பு’  படத்தில் வாசுதேவ நாயரின் பணி எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளித்தது.

அதன் ஆழமான கதை மற்றும் உணர்வால் இதயங்களை தொடும் இந்தத் தொகுப்பின் ஒவ்வொரு பகுதியும் மலையாள திரையுலகின் புகழ் பெற்ற கதை சொல்லல் மற்றும் இயக்குநரின் திறமையை எடுத்துரைக்கிறது. ‘மனோரதங்கல்’ ஒரு தலைசிறந்த ஒப்பற்ற படைப்பு. மேலும் எம்.டி.யின் இந்த குறிப்பிடத்தக்க கொண்டாட்டத்திற்கும், அய்யாவின் மரபிற்கும்.. பங்களிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

இயக்குநர் பிரியதர்ஷன் பேசும்போது,

”மனோரதங்கல்’ படத்திற்காக ‘ஒல்லவும் தீரவும்’ படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகும். எம்.டி.வாசுதேவன் நாயரின் ஸ்கிரிப்டுகள் தலைசிறந்த படைப்புகள். ஒவ்வொன்றும் மனித இயல்பின் நுட்பமான உணர்வுகளை ஆராயும் கலை படைப்பு. அவரது பார்வையை திரையில் கொண்டு வருவது என்பது சவால் மிக்க பொறுப்பு மற்றும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

இந்தத் தொகுப்பானது திரைத்துறையில் உள்ள பெரிய ஆளுமைகளின் கூட்டு முயற்சியாகும். ஒவ்வொருவரும் தங்களின் தனித்துவமான குரலை உருவாக்கி ஆழமான மனித மற்றும் உலகளாவிய தொடர்புள்ள கதைகளுக்கு தங்களின் பங்களிப்பை வழங்கி இருக்கின்றனர். எம்.டி.யின் நீடித்த புத்திசாலித்தனத்திற்கு சான்றாக நிற்கும் இந்த ‘மனோரதங்கல்’ படைப்பின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

எம்.டி.வாசுதேவன் நாயர் எனும் மலையாள இலக்கிய மேதையை உலகம் முழுவதும் திரைக்கு கொண்டு வரும் ஜீ-5 ஒரிஜினல் படைப்பான ‘மனோரதங்கல்’ ஆந்தாலாஜி தொடர், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியன்று ஜீ-5 ஓடிடி தளத்தில் திரையிடப்படுகிறது.

மேலும் இந்தத் தொடர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.