கிறிஸ்துவ அமைப்புகளிடம் சிக்கிய விஜய் ஆண்டனி!

இசையமைப்பாளர்,நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில்,, முதலிரவில் ஹீரோயின் சரக்கடிப்பது போல ஏன் வைத்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விஜய் ஆண்டனி பதிலளிக்கையில்,

” ஆண்கள் மட்டும் தான் குடிக்க வேண்டுமா? மது குடிப்பது பொதுவானது. ஆண்கள் ஒரு விஷயத்தை செய்தால் அதை பெண்களும் தாராளமாக செய்யலாம். பெண்கள் குடிக்கக் கூடாது என்று எல்லாம் பேசக் கூடாது அந்த காலத்திலேயே மது என்பது பல வடிவங்களில் இருந்தது. ஜீசஸ் குடிக்கலையா? அவர் குடித்த திராட்சை ரசமும் மது தானே என விஜய் ஆண்டனிக் கேட்டதாக சர்ச்சை வெடித்தது. விஜய் ஆண்டனியின் பேச்சுக்கு கிருஸ்தவ சபையினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அதற்கு விஜய் ஆண்டனி தற்போது விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், விஜய் ஆண்டனி தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

‘அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே, வணக்கம்.. நான் முன் தினம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது இப்போது அல்ல.  2000 வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசுபிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறியிருந்தேன்.

ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து,

நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தம் படுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டு இருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது.” என பதிவிட்டுள்ளார்.

இப்பதிவை பார்த்த சமபந்தப்பட்ட அமைப்பு ஒன்று “நாங்கள் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை.  நீங்கள் இயேசு கிறிஸ்துவை தவறாகச் சித்தரித்தீர்கள் உங்களுடைய முழு காணொளியைப் பார்த்தபிறகு தான் நாங்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டோம். என்று காட்டமாக பதிலளித்துள்ளது.