விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ அப்டேட்! – ஓடும் ரயிலில் அதிரடி ஆக்ஷன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மற்றும் வித்தியாசமான கதைகளக் கையாளுவதில் வல்லவரான இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘டிரெயின்’. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

ஒரு குறிப்பிட்ட இரவில், ஓடும் ரயிலுக்குள் இரண்டரை மணி நேர கால அளவில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் விரக்தியடைந்த ஒரு நபர் ரயிலில் பயணிக்கும்போது, அங்கு நடக்கும் ஒரு பிணைக்கைதிகள் கடத்தல் சம்பவத்தில் சிக்கிக்கொள்கிறார். ஆயுதம் ஏந்திய கும்பலிடமிருந்து அவர் மற்றவர்களை எப்படி மீட்கிறார் என்ற அதிரடி ஆக்ஷன் பாணியில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘டிரெயின்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், நரேன், நாசர், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வழக்கமாகப் பிற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றும் இயக்குநர் மிஷ்கின், இத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

‘டிரெயின்’ படத்தின் கிராபிக்ஸ் மற்றும் இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்த இதன் டீசர் மற்றும் ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘டிரெயின்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் கூறியிருப்பதாவது..,

ட்ரெயின் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு கூறியதாவது..,

மிஷ்கின் பற்றி சொன்னால் நான் ஈன்று எடுக்காத பிள்ளை. எல்லா படத்திற்கும் நான் கதை கேட்பேன் இந்த படத்திற்கு நான் கதை கேட்கவே இல்லை. இந்த படம் கால தாமதம் ஆனதற்கு நான் காரணம் இல்லை. இந்தப் படத்திற்கு தான் முதல் முறையாக பெரிய 8 கம்பார்ட்மென்டம் அமைத்திருக்கிறோம்.  விஜய் சேதுபதி அயராது உழைத்தார். மனிதநேயத்தின் மறுபக்கம் உள்ளவர் அதிகமான அறிவு கொண்டவர். நாசர் மிக அடிமையாக நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும். 63 நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

ட்ரெயின் திரைப்படத்தின் இயக்குநரும் இசையமைப்பாளருமான மிஷ்கின் கூறியதாவது..,

நந்தலாலா கதை சொல்லும் போது தானு சார் மீட் பண்ணினேன் ஆனா சார்க்கு கதை ஒண்ணுமே புரியல. ஆனால் விக்ரமுக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சது. பட் எங்களால் அப்பொழுது ஒன்னா சேர்ந்து படம் பண்ண முடியல அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. அதற்கு பிறகு தான் தானு சாரை மீட் பண்ணி ஒரு கதை பண்ணலாம்னு சொன்னேன்.  அவர், விஜய் சேதுபதி வைத்து பண்ணலாமுன்னு சொன்னார். விஜய் சேதுபதி என்கூட ரெண்டு நாள் வொர்க் பண்ணி இருக்காரு ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி. நான் அவருக்கு நோ சொல்லிட்டு அதுக்கப்புறம் பெரிய நடிகராக வளர்ந்துட்டாரு. என்னுடைய சைக்கோ படம் பாத்துட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் விஜய் சேதுபதி. அவரை மிக சிறந்த மனிதனாக நான் பார்த்தேன். இந்தக் கதையை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதினேன். இந்தப் படத்தை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் பண்ணி இருக்கவே முடியாது. கமல் சார் கூட பண்ணிருக்க முடியாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என்னோட படத்தை பத்தி நான் பெருமையா பேசல. படம் நல்லா இல்லைனா என்னை செருப்ப கழட்டி அடிங்க. விஜய் சேதுபதி நடிப்பை என்னால மறக்கவே முடியாது. எல்லாமே முதல் டேக் ஓகே பண்ணிட்டாரு. ஒரு காட்சி ஒரு டைம் சொன்னாலே அதை புரிஞ்சு மனசுல இருந்து நடிக்சு முடிச்சுருவாரு. நான் நாசர், நரேன் கூட ஒர்க் பண்ணி இருக்கேன். ஆனால் விஜய் சேதுபதி நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம், நான் பெருமைப்படுகிறேன். தானு சார்க்கும் ரொம்ப நன்றி. உங்க மேல மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு. பிசாசு 2 தயாரிப்பாளருக்கும் என்னுடைய நன்றி . அந்தப் படம் வரும் அதுக்காக நான் காத்திருப்பேன்.  சினிமா அப்படித்தான் இருக்கும். தானு சாருக்கு ரொம்ப நன்றி! உங்க காலத் தொட்டு வணங்குகிறேன்! இளையராஜா போன்று சுறுசுறுப்பான மனிதராக உங்களைப் பார்க்கிறேன், ரொம்ப நன்றி.

விஜய் சேதுபதி கூறியதாவது..,

‘’எனக்கு பேசறது நிறைய வார்த்தை இல்ல. எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இந்த படம் எப்ப வரும்னு நாங்க காத்துட்டு இருந்தோம். தானு சார் ஆகஸ்டுல கொண்டு வரேன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி!

மிஷ்கின்,  நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும்போது இவர் கிட்ட ஆடிஷன் போயிருக்கும் நான், ஹீரோ ஆனதுக்கப்புறம் ஒரு டைம் என்னை கூப்பிட்டாரு. கொஞ்சம் சைக்கோ மாதிரி இருப்பார். நான் டேட் இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன். சைக்கோ படம் பார்த்ததுக்கு அப்புறம் இவரை எனக்கு ரொம்ப புடிச்சுச்சு. சைக்கோ படம் பார்த்து முடிச்சுட்டு மிஷ்கின் கிட்ட எட்டு மணி நேரம் பேசினேன். எனக்கு ஒரு வாட்ச்  கொடுத்தார். பிசாசு 2 படத்துல ரெண்டு நாள் வொர்க் பண்ணினேன். அதுக்கு அப்புறம்தான்  ட்ரெயின் மூவி நடிச்சேன். செட் கலகலனு இருக்கும். மிஷ்கின் சார் நல்லா நடிக்கிறவங்களுக்கும் நல்லா வேலை செய்றவங்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது. அதனால எல்லோரும் சந்தோஷமா வேலை செஞ்சாங்க. இவரை சுத்தி இருக்குற எல்லாரையும் சந்தோஷமா வச்சுப்பாரு. அறிவு, அன்பு இரண்டையும் பகிர்ந்து கொள்வார்கள். இந்தப் படம் உங்களுக்கு திரில்லரா இருக்கும். ஆனா, எனக்கும் மிஷ்கின் சார்க்கும் ரொம்ப ரொமான்டிக்.  ஐ லவ் யூ மிஷ்கின் சார்! என் கூட நடிச்ச, எல்லாருக்கும் ரொம்ப நன்றி!