தமிழக IPS Officers Association சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதி

கேரளா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அம்மாநில மக்கள் தங்களது உடைமை¸ வீடுகளை இழந்து சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதிலுமிருந்து¸ பல்வேறு தரப்பினர் சார்பில் கேரளா மாநில மக்களுக்கு நிவாரண நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழக IPS Officers Association சார்பில் வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து IPS அதிகாரிகளின் ஒருநாள் சம்பளத்தொகை ரூ. 8¸78¸000/-த்தை கேரளா மாநில முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு IPS Officers Association தலைவர் திரு. மகேந்திரன்¸ இ.கா.ப அவர்கள் வழங்கினார்