மாதவன் நடித்த ‘ஆப் ஜெய்சா  கோய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

ஸ்ரீரேணு திரிபாதியாக ஆர். மாதவனும், மது போஸாக பாத்திமா சனா ஷேக்கும் நடித்திருக்கும் ’ஆப் ஜெய்சா கோய்’ (’உன்னைப் போல் ஒருவர்’) படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. எதிர்பாராத சூழ்நிலைகளில் நமக்கு கிடைக்கும் துணை, காதல் மற்றும் தோழமை ஆகியவற்றைக் கொண்டாடும் ஃபேமிலி டிராமாவாக இது உருவாகி இருக்கிறது.

ஜாம்ஷெட்பூர் மற்றும் கொல்கத்தாவில் இது படமாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்றி வளர்ந்த ஸ்ரீரேணு திரிபாதி ஆண்மை, தோழமை மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு பற்றிய நீண்டகாலமாக தனது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்குகிறார். சமூக கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவாறு தன்னை சுருக்கிக் கொள்ள மறுக்கும் ஒரு உற்சாகமான பெண்ணான மது தனக்கு வரும் வாழ்க்கைத் துணை காதலுடன் மட்டுமல்லாது தன் குணாதிசியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறாள். இவர்கள் இருவரின் பாதையை உள்ளடக்கிய கதையாக ‘ஆப் ஜெய்சா கோய்’ உருவாகி இருக்கிறது. இது காதல் கதையாக மட்டுமல்லாமல், ஒரு பெண்ணின் சுயத்தை மீட்டெடுப்பது பற்றிய கதையாகவும் மாறுகிறது.

நடிகர் மாதவனை காதல் ஜானரில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். ’ஆப் ஜெய்சா கோய்’ திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இதில் பாத்திமா சனா ஷேக் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். விவேக் சோனி (மீனாட்சி சுந்தரேஷ்வர்) இயக்கியுள்ள இந்தப் படத்தை தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. மேலும் ஆயிஷா ராசா, மணீஷ் சவுத்ரி மற்றும் நமித் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தனது கதாபாத்திரம் குறித்து நடிகர் மாதவன் பகிர்ந்து கொண்டதாவது,

“நான் இதற்கு முன்பு நடித்த எந்தவொரு காதல் கதையையும் போல ‘ஆப் ஜெய்சா கோய்’  இல்லாமல் முழுக்க முழுக்க மனித மனங்களைச் சார்ந்தது. நான் நடித்த மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஸ்ரீரேணுவும் ஒருவர். கம்பேனியன்ஷிப்பிற்காக ஏங்கும் ஒருவர். ஆனால், அதை எப்படிக் கேட்பது என்று கூட தெரியாத உள்ளுக்குள் அதிக உணர்ச்சிவசப்பட்டவர். இந்தப் படம் அதிரடியாக இருக்காது. ஆனால் பொறுமையாகவும், மென்மையாகவும் பார்ப்பவர்களை ஆழமாகப் பாதிக்கும் வகையிலும் இருக்கும். வாழ்க்கையிலோ அல்லது காதலிலோ புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தவர்களிடம் இது எவ்வாறு பேசுகிறது என்ற கருவால் நான் ஈர்க்கப்பட்டேன். ’ஆப் ஜெய்சா கோய்’ உங்கள் சொந்த விதிமுறைகளின்படி வாழத் தொடங்குவதற்கு வயது ஒரு தடையில்லை, நீங்கள் எப்போது வேண்டுமானலும் வாழத் தொடங்கலாம் என்பதை அழுத்தமாக பேசும் கதை” என்றார்.

பாத்திமா சனா ஷேக் பகிர்ந்து கொண்டதாவது,

“ஆப் ஜெய்சா கோயி’ படத்தில் நடித்திருப்பது உண்மையிலேயே எனக்கு பாக்கியம். நான் மாதவனின் மிகப்பெரிய ரசிகை! அவருடன் மது கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. நாம் பெரும்பாலும் வலிமை, நம்பிக்கையை ஆண்மையுடன் தொடர்புபடுத்துகிறோம், ஆனால், மது இந்த குணங்களை மென்மை மற்றும் பெண்மையுடன் வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்தின் மூலம், நான் அன்பின் வெவ்வேறு வடிவங்களை உணர முடிந்தது. எனக்கும் அது தெரபியாக அமைந்தது. தனித்துவமான இயக்குநர் விவேக்குடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நேர்மையான இந்த கதையில் விவேக், மேடி, நெட்ஃபிலிக்ஸ் மற்றும் தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது எனது கரியரில் முக்கியமான தருணம்” என்றார்.

‘ஆப் ஜெய்சா கோய்’ திரைப்படம், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 11, 2025 அன்று ஸ்ட்ரீம் ஆகிறது.