சுபாஷ்கரனின் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், ஆக்ஷன், அட்வென்ச்சர், காமெடி திரைப்படமாக உருவாகியிருக்கிறது, சிக்மா. அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், 65 நாட்களில், வெற்றிகரமாக 95% படப்பிடிப்பினை நிறைவு செய்துள்ளது.
சமூக விதிமுறைகளை மீறி, லட்சியத்துடன் தன் இலக்குகளைத் தொடரும், அச்சமற்ற ஒருவனின் கதையைச் சொல்வதுதான் ‘சிக்மா’ திரைப்படம். நடிகர் சந்தீப் கிஷனை, முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கலாம். அவர், மொழி, எல்லைகள் கடந்து, ரசிகர்கள் மத்தியில் பான் இந்திய ஸ்டாராக, இதன் மூலம் மாற இருக்கிறார். சந்தீப் கிஷனுடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜபே, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இறுதி கட்டப்பணிகளை எட்டியுள்ள ‘சிக்மா’ பட த்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய் கூறியதாவது..,
’சிக்மா’ என்ற டைட்டில் பயமில்லாத, சுதந்திரமான, சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள படாத ஒருவன், தன் இலக்குகளை நோக்கி நகர்வதை இந்தப் படம் பேசும். வேட்டை, கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். தமனின் இசையும், சந்தீப் கிஷனின் நடிப்புடன், ‘லைகா புரொடக்ஷன்ஸின்’ பிரம்மாண்டமான தயாரிப்பு, நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும். இந்நிறுவனத்தின் ஆதரவால், குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பு நடத்தி முடிப்பது சாத்தியமானது. இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது முடிந்த பின், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்குகிறது. என்றார்.
சிக்மா படத்தின் படப்பிடிப்பு சென்னை, சேலம், தலக்கோனா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. லைவ் லொகேஷன் மற்றும் கதையின் சாகசத்திற்கு ஏற்ற சிறப்பு செட்டும் அமைக்கப்பட்டுள்ளதாம்.
