கத்தாரில் நடைபெறும் ‘சைமா’ விருதுகள் வழங்கும் விழா!

ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் ‘சைமா’ தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இந்த வருடம் கத்தாரில் நடைபெறவுள்ளது. இது குறித்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது…

பாண்டலூன்ஸ் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) முதன்முறையாக கத்தாரில் நடைபெறவுள்ளது, இதில் இந்திய சினிமாவைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.  ஆகஸ்ட் 15 மற்றும் 16 அன்று இந்த விழா நடைபெறவுள்ளது.  பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.  ஒன் எஃப்எம் 89.6 இல் தோஹாவில் இயங்கும் இந்நிகழ்ச்சி லுசெயில் உள்ளரங்க அரங்கில் நடைபெறவிருக்கிறது.

நிகழ்வின் அமைப்பாளர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு விவரங்கள் கூற ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.  கியூ.என்.டி.சி மஷால் ஷாபிக், விஷ்ணு இந்தூரி, சைமா உரிமையாளர்,  நவீத் அப்துல்லா, தலைமை நிர்வாக அதிகாரி- ஒன் எஃப்.எம் கத்தார்;  ஜாசிம் முகமது, சி.சி.ஓ- ஒன் எஃப்.எம் கத்தார், Dr. ஆர் சீதாராமன் (தலைமை நிர்வாக அதிகாரி- தோஹா வங்கி), மேதத் கிரேஸ் (டெய்சீர் மோட்டார்ஸ் பொது மேலாளர்), வாசிம் தாகே- பொது மேலாளர் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

இந்திய நடிகைகள் ஆண்ட்ரியா எரேமியா மற்றும் மன்விதா ஹரிஷ் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.  இதில் ஸ்பான்சர்களுடன் ஊடகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.  திரு விஷ்ணுவர்தன் இந்தூரி, சைமா 2019 இல் கலந்து கொண்ட பிரபலங்களையும், விருந்தினர் பட்டியலையும், குறும்பட வெற்றியாளர்களையும், சைமா 2019 இல் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சிகளையும் பற்றி கூறினார்.

4 மொழி திரைபிரபலன்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 தெலுங்கு மற்றும் கன்னடம் மற்றும் ஆகஸ்ட் 16 தமிழ் மற்றும் மலையாளம் நடைபெற உள்ளது.

இப்போது அதன் எட்டாவது ஆண்டில், சைமா அதிகம் பார்க்கப்படும் விருது நிகழ்ச்சியாகும், இது திறமையையும் சிறப்பையும் அங்கீகரிக்கிறது, அதே நேரத்தில் தென்னிந்திய சினிமாவை உலகளாவிய எல்லைகளில் கொண்டு சென்று தென்னிந்திய நடிகர்களுக்கு சர்வதேச ரசிகர்களை ஏற்படுத்தித்தரும் ஒரு தளத்தை உருவாக்குகிறது.

திரைப்பட விருதுகள் தவிர, தென்னிந்திய வர்த்தக சாதனையாளர்களை பாராட்டும் வணிக விருது ஆகஸ்ட் 14 ஆம் தேதி சொகுசு மாண்ட்ரியன் தோஹாவில் நடைபெறும்.  கத்தார் முக்கிய நபர்கள் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார பங்களிப்பாளர்களை பாராட்ட நடைபெறுகிறது.  பிரபலங்கள் மற்றும் உயர் தொழில் வல்லுநர்களால் விருதுகள் இவர்களுக்கு வழங்கப்படும். என அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.