கைவிடப்பட்டது ‘மாநாடு’ ரசிகர்களை ஏமாற்றினார் சிம்பு!!!

நடிகர் சிம்பு அவர் நடிக்கும் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்து வந்தது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தயாரிப்பாளர் சிம்பு மீது குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை பொய்யாக்கும் விதத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்திற்கு சரியாக ஒத்துழைத்து நடித்துக்கொடுத்தார். படமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்புவின் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் படபிடிப்பு தொடங்கப்படாமல் இருந்த நிலையில் அன்மையில் ‘மாநாடு’ படப்பிடிப்பு வெளிநாட்டில் படம்பிடிக்கப்படுவதாக சொல்லப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

சிம்புவிற்கு பதிலாக வேறு ஒரு நடிகரை வைத்து படத்தை தொடரப்போவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

 

வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார்.

தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.

அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!

 

இவ்வாறு அந்த அறிக்கையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.