தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் வாரிசுதாரர்கள் 19 நபர்களுக்கு வருவாய் துறை, சத்துணவு திட்டத் துறை ஆகிய துறைகளில் கருணை அடிப்படையில் இன்று (27.9.2018) பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வழங்கினார்.