புதிதான முறையில், திரைப்படத் தயாரிப்பாளர் தீபன் பூபதி – நிவேதிதா கிரி திருமணம்!

தமிழ் திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளராக திகழும் தீபன் பூபதி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோரும் டாட்டூ கலைஞருமான நிவேதிதா கிரியுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவர்களின் திருமணம் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.

ஆடம்பர நிகழ்வுகளுக்கு பதிலாக, நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்ற தனிப்பட்ட நிகழ்வாக இந்த திருமணம் அமைந்தது. பாரம்பரிய சடங்குகள், குடும்ப மூத்தோரின் ஆசீர்வாதங்கள் மற்றும் உறவுகளின் அன்பு ஆகியவற்றின் மத்தியில் மணமக்கள் தங்களது புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினர்.

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த தீபன் பூபதி, இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தமிழ் திரைப்படத் துறையில் இயங்கி வரும் தீபன் பூபதி, தரமான கதைகள் மற்றும் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படைப்புகளை தயாரித்து வருபவர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ திரைப்படம் அவரது தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது.

படைப்பாற்றலால் உயர்ந்த நிவேதிதா கிரி, ஆஸ்திரேலியாவில் தனது தொழில் வாழ்க்கையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ள நிவேதிதா கிரி, தொழில்முனைவோர் மற்றும் டாட்டூ கலைஞராக அறியப்படுகிறார். தனது கலைத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் தனித்துவமான அணுகுமுறையால் தனது துறையில் மதிப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளார்.

வாழ்த்துகள் தெரிவிக்கும் நண்பர்கள், உறவினர்கள் திருமண நிகழ்வைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய கொண்டாட்டத்தில் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திரையுலகினர், தொழில்முனைவோர் வட்டாரங்கள் மற்றும் நண்பர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் நேரடியாகவும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள தீபன் பூபதி – நிவேதிதா கிரி தம்பதியருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.