சல்மான் கான் – கத்ரீனா கைப் உற்சாகம்!

பாலிவுட் மெகாஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் சமீபத்தில் ‘டைகர் 3’யிலிருந்து வெளியான ‘லேகே பிரப கா நாம்’ பாடல் உடனடி ஹிட் ஆனதை தொடர்ந்து ரொம்பவே உற்சாகமடைந்துள்ளார்கள். பிரீத்தம் இசையமைப்பில்  ஹிந்தியில் அர்ஜித் சிங் மற்றும் நிகிதா காந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் பென்னி தயாள் மற்றும் அனுஷா மணி ஆகியோரால் பாடப்பட்ட இந்த பாடல் இணையத்தை அடித்து நொறுக்கியுள்ளது. ரசிகர்கள் இந்தப்பாடலின் இசையையும் சல்மான் கான் மற்றும் கத்ரீனாவின் அதிரவைக்கும் கெமிஸ்ட்ரியையும் புகழ்ந்து வருகிறார்கள்.

சல்மான் கான் கூறும்போது..,

“இந்தப் பாடலுக்கான வரவேற்பு ரொம்பவே பாசிட்டிவாக இருப்பதுடன் இந்த பண்டிகை சீசனுக்காக ஒரு பார்ட்டி ஆந்தம் பாடலை ரசிகர்கள் எப்படி கண்டு கொண்டார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. என்னுடைய படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் எப்போதும் மக்களை மகிழ்விப்பதில் நான் சந்தோஷமாக உணர்கிறேன். மக்கள் எல்லாவற்றையும் மறந்து திரையரங்கிற்குள் நுழைந்து சினிமா சிருஷ்டிக்கும் புதிய உலகத்திற்குள் தங்களை இணைத்துக்கொள்ள செய்வதை விட பெரிய சந்தோஷம் என எதையும் நான் பார்த்ததில்லை”.

“பாடல்களும் நடனமும் நமது திரைப்படங்களில், கலாச்சாரத்தில் ஒரு பாகமாக இருக்கின்றன. அதனால் என்னுடைய படங்களின் பாடல்கள் மக்களை உற்சாகப்படுத்தும்போது நான் மகிழ்கிறேன். ஒரு பாடலுக்கான சம்பந்தம் என்பது தலைமுறைகளை கடந்து நிற்கும் என்பதை நான் எப்போதுமே நம்புகிறேன். அப்படி இதுபோன்ற சில பாடல்கள் என் திரையுலக பயணத்தில் எனக்கு அமைந்ததில் நான் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறேன். அந்தவகையில் “லேகே பிரபு கா நாம்” பாடலும் சரியான சமயத்தில் அவற்றில் ஒன்றாக மாறும்” என்றார்.

கத்ரீனா கூறுகையில்..,

“ஒரு படம், நடிப்புத்திறமை, ஒரு பாடல் என இவை அனைத்தும் வெற்றி என சொல்லப்பட வேண்டுமானால் பார்வையாளர்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. எனது திரையுலக பயணத்தின் வாயிலாக இதை கண்டுபிடித்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு படத்தில் நடிப்புத்திறனுடன் சேர்ந்து நாங்கள் நடிக்கும் பாடல்களையும் பார்த்து மக்கள் உற்சாகமடைகிறார்கள் என்பதும் எனக்கு தெரியும்’.

“இதை நான் மிகப்பெரிய பரிசாக எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் பாடல்களும் நடனமும் நமது கலாச்சாரத்தில் நமது திரைப்படங்களில் ஒரு பாகமாக இருப்பதுடன் காலம் காலமாக அவை நேசிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் வந்திருக்கின்றன.  நம் பாடல்களின் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அது ஒவ்வொரு முறையும் இன்னும் சிறந்த நடிப்பை தருவதற்கு எரிபொருளாக அமைகிறது என்பதையும் நான் அறிந்த இருக்கிறேன்” என்றார்.

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படமாக ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கத்தில் இந்த ‘டைகர் 3’ உருவாகியுள்ளது. இந்தப்படம் இந்தவருட தீபாவளி ரிலீஸாக வரும் நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது