சூர்யாவின் ‘பொன்மகள்’ வந்தாள்!

தகுதி வாய்ந்த இயக்குனர்களின் தரமான படைப்புக்களை அங்கீகரிக்கும் படத் தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனம்  ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனம் ஆகும். சமுதாயத்திற்கு பயன் தரும் நல்ல படங்களை தருவதோடு திறமையானவர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்ச்சசி’ பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில்  இயக்குநர் மற்றும் நடிகர்களான பிரதாப் போத்தன்,பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன்  ஆகிய நால்வரும் நடிக்கவுள்ளனர்..”பொன்மகள் வந்தாள்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எழுதி, இயக்கி அறிமுகமாகிறார்  ஜே ஜே ப்ரட்ரிக்,

ராம்ஜி இப்படத்தின் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா தான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவின் ‘அகரம்’ பவுண்டேஷனில் படத்தின் பூஜை இன்று காலையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. பூஜையில்  நடிகர்  சிவக்குமார்,   ‘2D எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள், ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், ‘2D எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன்  ஆகியோரும், படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் ஜே ஜே ப்ரட்ரிக் உள்பட  பலரும் கலந்து கொண்டனர்.