1980 களில் நடந்த உண்மை காதல் கதை ‘பூவே போகாதே’

கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சத்யபிரமீலா தயாரிக்கும் படம் “ பூவே போகாதே “ . தருண் தேஜ் கதாநாயகனவும், கதாநாயகியாக லாவண்யாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் நவீன் நயனி.

“ பூவே போகாதே “ படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

1980 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம் “ பூவே போகாதே “. இது. முழுக்க முழுக்க நாயகன், நாயகியை சுற்றி நடக்கும் திரைக்கதை.

கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள். 1980 களில் காதலை இந்த சமூகம் எப்படி பார்த்தது என்பதை அழுத்தமாக பதிவிட்டுள்ளோம். தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் நவீன் நயனி.