‘கலியுகம்’ பட பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியிருப்பவர், பிரமோத் சுந்தர். இவர் ஒரு புத்தம் புதிய கதைக்களத்துடன் திரைத்துறைக்குள் நுழைந்துள்ளார்.

 இதுவரை, எந்த  இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத பிரமோத் சுந்தர் இயக்கவுள்ள  படத்தின் பெயர் ‘கலியுகம்’. .  ஹாரர், த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.

‘கலியுகம்’ படத்துக்காக பிரம்மாண்டமாக  அமைக்கப்பட்ட அரங்கினில் பூஜையுடன் படப்பிடிப்பு  தொடங்கியது.  முக்கியமான கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார்.

ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா தயாரிக்கிறார்

முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

புதுமையான கதைக்களம் கொண்ட இந்தப் படத்தின் காட்சியமைப்பு, திரைக்கதை, அரங்குகள் என அனைத்துமே பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் என்கிறார், இயக்குநர் பிரமோத் சுந்தர்.