அஷோக்செல்வன், ரியா நடிக்கும் புதிய படம்!

தமிழ்திரையுலகில் திரைப்பட விநியோகம் செய்து கொண்டிருக்கும் A R ENTERTAINMENT எனும் நிறுவனம் திரைப்பட தயாரிப்பிலும் அடியெடுத்து வைக்கிறது.

இந்நிறுவனத்தின் முதல்படைப்பை அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட் எழுதி இயக்குகிறார்.இவர் சந்துரு மற்றும் மதுமிதா ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும், டிவி, OTT மற்றும் விளம்பரத்துறைகளிலும், பிக்பாஸ் போன்ற முன்னணி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

இத்திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் அஷோக்செல்வன், ரியா, பிரவீன்ராஜா, ரித்விகா, அபிஹாசன், அஞ்சு குரியன், மணிகண்டன் ஆகியோர்நடிக்கமுக்கியகதாபாத்திரங்களில்நாசர், K.S.ரவிக்குமார், பானுப்பிரியா, மற்றும் அனுபமாகுமார் ஆகியோர் ஒன்றினைந்து நடிக்க இருக்கிறார்கள்.

விக்ரம் வேதா படத்தின் புகழ் பெற்ற வசனகர்த்தா மணிகண்டன் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட KD என்கிற கருப்புதுறை படத்தின் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய,அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ரதன் இசையமைக்கிறார், பிரசன்னாGK படத்தொகுப்பு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது, TRIDENT ARTS நிறுவனம் இந்த படத்தை வெளியீடுசெய்கிறது.

இந்த படம் வெவ்வேறு வாழ்க்கை சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு கதாபாத்திரங்களின்  ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதையாக உருவாக்கபட்டு இருக்கின்றது. இரண்டு நாட்களில் நடக்கும் இந்த கதை மனித மனத்தின் உள்ளார்ந்த உணர்ச்சிகளை பற்றி பேசும் படமாகவும் இருக்கும்.