ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 50,000 ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி !

சென்னை, பரங்கிமலையில் உள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளி வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 50,000 ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

லைன்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் மற்றும் ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் இயக்குனர், நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் நடிகர், இயக்குனர் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.